இடுகைகள்

வெள்ளைக்காரன் ஆட்சியே தேவலாம்

படம்
விடுதலை பெற்ற இந்தியாவில், வெள்ளைக்காரன் ஆட்சியே தேவலாம்! என்று இந்தியாவில் பல பெரிசுகள் புலம்பும் போது, 'என்னயிது விடுதலை பெற்ற நாட்டில் அடிமை ஆட்சியைப் பற்றி புகழ்ந்து பேசுவது' என்று சிலருக்கு அருவருப்பாகக் கூடத் தோன்றலாம். 'அப்படியா? ஏன் அப்படி சொல்கின்றீர்கள்' என்று சிலருக்கு புருவத்தை உயர்த்தவும் தோன்றலாம். தந்தை பெரியார் கூட வெள்ளையர் ஆட்சியே தேவலாம் என்று சொன்னவர்தான்.  வெள்ளையன் ஆட்சியில் இந்திய மாநிலத்தவர்கள் அனைவருமாக ஒரு நியாயத்திற்குப் போகும் போது, அவன் முழுக்க நமக்கு அனைவருக்குமான அன்னியன் என்பதால், நியாயம் சொல்ல அவனுக்கு உண்மை மட்டுமே தேவைப் படுகின்றது. அவன் வழங்குகிற தீர்ப்பு உண்மையானதாக இருந்தது. ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில், இந்திய மாநிலத்தவர்கள் அனைவருமாக ஒரு நியாயத்திற்குப் போகும் போது, நியாயம் சொல்லப் போகிறவன் இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கு சொந்தக்காரன்.  ஒட்டு மொத்த இந்திய மக்களுக்காக ஒற்றை ஆணிகூட பிடுங்காத மோடி ஆட்சியில், குஜராத் மாநிலம் மட்டும் எல்லையில்லாமல் வளர்ந்திருக்கிறது. சட்டத்திற்கு புறம்பாக ஹிந்தி மொழி வளர்ச்சி காங்கிரஸ்கட

ஹிந்தி, ஹிந்துத்துவா

படம்
தமிழில் அயல்மொழிச் சொற்களைப் பயன் படுத்த, அந்தச் செல்லையே தமிழ் ஒலிப்பிற்கு தக்கவாறு மாற்றி ஒலிக்க வேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழ் அறிஞர்கள் சில விதிகளை வகுத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, இங்கிலீஸ் என்பதை ஆங்கிலம் என்று ஒலித்து பயன்படுத்துகிறோம். கால மாற்றத்திற்கு இப்படி பிறமொழிச் சொற்கள் நிறைய தமிழில் புழக்கத்தில் கொண்டு வரப் பட்டுவிட்டன. அப்படி பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்ட இரண்டு சொற்கள் மட்டும் தமிழ் ஒலிப்பிற்கு தக்க மாதிரி மாற்றி ஒலிப்பதால், மிக மிக ஆபத்தானவைகளாக, தமிழக வரலாற்று அடிப்படையையே சிதைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த இரண்டு சொற்கள் ஒன்று ஹிந்தி, மன்றொன்று ஹிந்துத்துவா. இந்த இரண்டு சொற்களை நாம் இந்தி என்றும், இந்துத்துவா என்றும் ஒலிப்பை தமிழ் மொழிக்குத் தக்கவாறு மாற்றி புழங்குகிறோம். இதனால் நமது மண்ணான இந்தியாவும் அவர்களுடைய மண்ணோ என்ற மயக்கத்தை உருவாக்குகிறது.  எஸ்.வி.இராஜதுரை என்ற ஒரு தமிழ் ஆர்வலர் இந்தி, இந்து, இந்தியா என்று ஒரு நூலை எழுதி இந்தியாவும் அவர்களுக்குச் சொந்தம் போல கடுமையாக இந்தியாவையும் சேர்த்து சாடுகிறார்.  இன்ன

இராசராச சோழன்

படம்
வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர்  தமிழர் நூறு விழுக்காட்டினரும் ஒரே உயரமாக காட்சியளிப்பார்கள். அறிவாற்றலா? தனித்துவமா? பொருளாதாரமா? அன்பா? நியாயமா? ஆதிகாரமா? கோபமா? பணிவா? எதுவாக இருந்தாலும் சரி. ஒரு தமிழனை இன்னொரு தமிழன் சரிநிகர் என்றால் ஒப்புக் கொள்வான். உயர்ந்தவன் என்றாலோ, தாழ்ந்தவன் என்றாலும் கூட ஒப்புக் கொள்ள மாட்டான். அறைகூவலை எந்தத் தமிழனும் மறுதளிக்க மாட்டான். நியாயத்தை ஒற்றை மனிதனைப் போல ஒட்டு மொத்த தமிழரும் ஒப்புக் கொள்வார்கள். இதுதான் தமிழர் பலம் ; பலவீனம். ஆனால் தமிழர் அல்லாதவர்களிடம் ஏதாவது ஒற்றைத் தகுதி தன்னை விடச் சிறப்பாக இருந்தாலே போதும். தமிழன் தான் மட்டுமல்ல, அவன் தன்னைச் சார்ந்தவர்கள் அனைவரையும் அந்தத் தமிழர் அல்லாதவரை, அங்கிகரிக்கச் செய்வான். தமிழன் ஒருவன் உண்மை சொன்னாலே, இன்னொரு தமிழன் ஆய்வுக்கு உட்படுத்தியே ஒப்புக் கொள்வான். தமிழர் அல்லாதவர்கள் பொய் சொன்னால் கூட அவ்வளவாக ஆய்வுக்குட்படுத்த மாட்டான்.   இதனாலேயே தமிழர் அல்லாதவர்கள், தமிழரை கூட்டம் கூட்டமாக அள்ளிக் கொள்ள முடிகிறது. தமிழர்களிடம், தான் உயர்ந்தவன் என்று, ஒர

முதல் பத்து உடைமையாளர்கள்

படம்
முதல் பத்து பணக்காரர்களில் ஒரு தமிழன் இல்லை. முதல் பத்து அரசியல்வாதிகளில் ஒரு தமிழன் இல்லை. முதல் பத்து நடிகர்களில் ஒரு தமிழன் இல்லை. முதல் பத்து ஊடகங்களில் ஒன்றும் தமிழனுடையது இல்லை. எந்த அலைக்கற்றை வரிசையும் தமிழனுடையது இல்லை. உச்ச அறங்கூற்றுமன்றத்தில் இருந்து உலக அறங்கூற்றுமன்றம் வரை தமிழன் இல்லை. முதல் பத்து அறக்கட்டளைகளில் ஒன்றும் தமிழனுடையது இல்லை. 1.கல்வி 2.கலை 3.இலக்கியம் 4.தொழில் 5.கருவிகள் 6.உடை,அணிகலன் 7.உணவுகள் 8.வணிகம் 9.நாடு 10.அரசு 11.நீராதாரம் 12.கோயில் 13.நிதி 14.அறங்கூற்று 15.பாதுகாப்பு 16.பண்பாடு 17.வரலாறு ஆகியவற்றில் எல்லாம் உடைமையாளனாக எந்தத் தமிழனும் இல்லாத போது, தமிழர்களின் வாழ்மானம்- எல்லா தளத்திலும் அயலவர்களை உடைமையாளர்களாக நிறுத்தி, நிருவாகக் கூலியாகவோ உடலுழைப்புக் கூலியாகவோ இயங்குவதாகத்தாகவே யிருக்கிற போது, எந்தத் தமிழனும் எந்தத் துறையிலும் உடைமையாளனாக மாறுகிற முயற்சியேயில்லாமல் வெறுமனே சாதி வேண்டாம்! மதம் வேண்டாம்! திராவிடம் வேண்டாம்! இந்தியம் வேண்டாம்! தமிழனாக இருப்போம். என்றெல்லா

தமிழர் உடைமைகள் கட்டுவோம்!

படம்
உடைமை! தலைப்பில் இருந்து தமிழர்கள் விலகி பல ஆயிரம் ஆண்டுகளாகி விட்டன. தமிழ்நாட்டின் வேளாண்மை, தொழில், வணிகம், கலை, கல்வி, என்று எந்தத் துறைக்கும் தமிழன் உடைமையாளனாக இல்லை.  ஆனால் எல்லாத் துறைகளிலும் உலகளாவி தமிழன் இருக்கிறான்; உடல் உழைப்புக் கூலியாகவோ அல்லது நிருவாகக் கூலியாகவோ.        சுந்தர் பிச்சை அண்மைக் கால தமிழர் பெருமை. உலகின் மிகப் பெரிய நிறுவனத்திற்கே தலைவராம். உடைமைத் தளத்தில் பில்கேட்ஸ், அம்பானி என்று மட்டுமே பட்டியல் போடுவார்களாம். ஆனால் கூலித் தளத்திற்கு தமிழர்கள் மட்டுந்தானாம்.        அன்னியர் ஆட்சியில்தான் கப்பலோட்டிய தமிழன் உடைமையாளராக முயற்சித்தார் என்று செக்கிழுத்தார் என்றால் இன்றைக்கும் அப்படித்தான்.  தமிழன் தொழில் அதிபராகவோ, வணிகராக, வளர்ந்துவிடாமல் தடுக்க சட்ட நிருவாகத்தில் ஏழாயிரம் கிடிக்கிப் பிடிகள். சுயமாக முன்னேறி விடாமல் தடுக்க சாராயக் கடைகள்.        உடைமையாளனை உருவாக்க கல்வி கிடையாது. எல்லாக் கல்வி நிறுவனங்களும் நிருவாகக் கூலிகளை உருவாக்கவே.  அந்தக் கல்வி நிறுவன முதலாளிகளாகக் கூட தமிழர்கள் வந்து விடமாட்டர்கள்.  நிருவாகக் கூலிகளை உலகளாவி உருவாக்குவதற்கென்றே ஆங

நாவலந்தேயம்

படம்
பத்தாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர். இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர். அது உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம். உலகம்- தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம். உலகினர் தமிழர் நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம். இந்தியா குறித்து ‘நாவலந்தேயம் ’ என்ற அறிமுகம் மட்டுமே இருந்தது. அதைத்தான் உலகினர், ந்தேயம் -ந்தேயா - India என்று பதிவு செய்தனர். அமெரிக்காவில் ஐரோப்பியர் இந்தியாவைத் தேடியதும் அதன் பொருட்டே. வடவர்கள் இந்தியா என்ற சொல்லை விரும்ப மாட்டார்கள். ஹிந்தியில் குறிப்பிடும் போது (ரூபாய் நோட்டில்) பாரதிய ரிசர்வ் பைங் என்றே இருக்கும். பாரதஸ்டேட் பைங் பாரதிய ஜனதா கட்சி என்பனவற்றை ஒப்பு நோக்குங்கள்.       அப்படி இப்படி என்று நீண்ட காலத்திற்குப் பிறகு வாசுகோடகா

தமிழ்மொழியில் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும் 

படம்
அயலவர்களிடம் நமது உடைமையை ஒப்படைத்து விட்டு, கொஞ்சம் கூடுதல் கூலியில் நம்முடைய சில குழந்தைகள் நிருவாகத் தளத்தில் இயங்கப்போகும் கனவில், நம்முடைய தமிழர்களிலேயே பெரும்பாலான குழந்தைகள் மிக மிகக் குறைந்த கூலியில் உடல் உழைப்புத் தளத்தில் நிற்கப் போகிற அவலத்தைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாய் போட்டி போட்டுக் கொண்டு, மழலையர்க் கல்வியிலிருந்தே ஆங்கிலம் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். எத்தனை பேர் ஆங்கிலம் கற்பினும் சரி முதல் பத்து பேருக்கு மட்டும் தான் நிருவாகத் தளத்தில் இடம் அளிப்பர் (அளிக்க முடியும்) அயல் உடைமையாளர்கள். ஆங்கிலக் கல்வி கற்ற போதும் அடுத்த தொன்னூறு பேர் உடல் உழைப்புத் தளத்தில்தாம் நிற்க வேண்டியிருக்கும்; நின்று கொண்டுதாம் இருக்கிறோம். ஆனால் அயலவரிடம் நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒப்படைத்து விட்ட உடைமைத் தளத்தில் நூற்றுக்கு நூறு பேருமே இயங்க முடியும். ஆனால் உடைமைத் தளத்தில் இயங்குவதற்கு முதல் தேவை ஊக்கம். பிறந்த குழந்தை ஐந்து அகவை நிறைவடையும் போதே ஆயிரக் கணக்கான சொற்களைக் கட்டமைத்துப் பேசும் தன்னம்பிக்கையைத் தாய்மொழி மட்டுமே வழங்கவியலும். மூன்றாவது அகவையிலி

ஆங்கில வெறி

படம்
ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற வெறி நிறைய தமிழர்களிடம் இருப்பதாக பட்டியல் இடுகிறோம், சாடுகிறோம், இழிவாகப் பார்க்கிறோம், மானங்கெட்டவனே என்று தூற்றுகிறோம். தமிழ்வழிப் பள்ளியில் கூட ஆங்கிலத்தை ஒரு பாடமாக வைத்து தேர்ச்சிக்கு மதிப்பெண் வைத்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பேர்கள் பள்ளி இறுதி வகுப்பைத் தாண்ட விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது யாரால்? எப்படி? ஏன் தொடர்ந்து நிறைவேற்றப் பட்டுக்கொண்டிருகிறது. விடுதலை பெற்று 70 ஆண்டுகளாக இந்த வகையாக தடுக்கி விழுந்தவர்கள் தானே தம் பிள்ளைகள் படிப்பு பள்ளி இறுதி வகுப்போடு தடைபட்டு விடக்கூடாது என்கிற உத்வேகத்தில் ஆங்கிலக் கல்விக்கு துணை போக வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டுக் கிடக்கின்றார்கள். விடுதலை ஆங்கிலேயர்கள் கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டோம். ஆனால் விடுபடவில்லை; விடுபடத்தெரியவில்லை; விடுபட சிந்தித்தாக வேண்டும். 70 ஆண்டுகளை வீணே கழித்து விட்டோம்.

முதலாவது உடைமை

படம்
தமிழ்! என்னுடைய முதலாவது உடைமை என் தாய் தன் இரத்தத்தை பாலாக்கி என் உடல் வளர்த்தார். தன் உயிர்க்காற்றை மொழியாக்கி என்செவிக்கு உணவாக்கி அறிவு தந்தார். என்உடலும் என்தமிழும் என் தாய் எனக்குத் தந்த முதல் உடைமைகள். அவைகளே எனக்கு அடிப்படை. அவைகளே எனக்கு ஆதாரம். என்தமிழ் ! தமிழ்! என்னுடைய முதலாவது உடைமை. என் தாய் தன் இரத்தத்தை பாலாக்கி என் உடல் வளர்த்தார். தன் உயிர்க்காற்றை மொழியாக்கி என்செவிக்கு உணவாக்கி அறிவு தந்தார். என்உடலும் என்தமிழும் என் தாய் எனக்குத் தந்த முதல் உடைமைகள். அவைகளே எனக்கு அடிப்படை. அவைகளே எனக்கு ஆதாரம். என்தமிழ் ! என்தாய் எனக்கு தந்த முதல் உடைமை என்பதே எனக்குப் பெருமை. என்தமிழை! எந்த இன்னொரு மொழியோடும் வைத்து ஒப்பிடத் தேவையில்லை. என்தமிழை! பாதுகாக்க வேண்டியதும் பெருமைப் படுத்த வேண்டியதுமான கடமை என்னுடைதே. தாய்மொழி! வெறுமனே கருத்துப் பறிமாற்றக் கருவியன்று. அதுவே அவன் அறிவின் மூலம். அடுத்த மொழிகள் எத்தனை கற்றாலும் அவைகள் கருவிகள் மட்டுமே. தமிழ் உயர்வானது!  தமிழ் பழமையானது! தமிழ் வளமையானது! தமிழ் செம்மையானது! என்பதெல்லாம் நிற்காது. தமிழ் என்தாய் எனக்குத் தந்த முதல் உடைமை என்ப