ஐயா என்பதை அய்யா என்று அழைப்பது சரியா?



தமிழ் எழுத்துச் சீரமைப்பு என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிவடிவத்தை மாற்றியமைக்க மேற்கொள்ளப்பட்டதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதுமான முயற்சிகளாகும். தமிழை முதலில் தாமிழி எழுத்து வடிவம் கொண்டு எழுதினர். பின்பு தமிழின் எழுத்து வடிவம் பல மாற்றங்களை கண்டு இன்றைய நிலையில் நிலைத்துள்ளது.

தொல்காப்பியம் உயிர்-12, மெய்-18 என முதலெழுத்துக்கள் முப்பது என்றும், சார்பெழுத்துக்கள் உயிர்மெய்-216 எனவும் எழுத்து வடிவங்களைத் சுட்டி நிற்கிறது

குமரன் இதழ் ஆசிரியர் முருகப்பா பயன்படுத்திய மாற்றங்களையும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த அய், அவ் ஒலி மாற்றங்களையும் சேர்த்து திருத்தி ஒரு வரிவடிவத்தைப் புகுத்தி தொடந்து குடியரசிலும், விடுதலையிலும் பயன்படுத்தினர். (அய், அவ், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ)

எம்ஜியார் ஆட்சியில், பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டித் தமிழ்நாடு அரசு, முதற்கட்டமாகப் பெரியார் பயன்படுத்தி வந்த இந்த வரி வடிவத்தில் அய், அவ் தவிர மற்றவற்றைச் செயற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் அரசு இச்சீர்திருத்தத்தை ஏற்று, பொங்கல் திருநாள் முதல் செயற்படுத்தியது. அதனால் தமிழில் ‘ஐ’காரத்தை புறந்தள்ள முடியாது. அதனால் அய்யா என்று எழுதக்கூடாது ஐயா என்றே எழுத வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாலியல் கல்வி

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்