இடுகைகள்

பிப்ரவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெள்ளைக்காரன் ஆட்சியே தேவலாம்

படம்
விடுதலை பெற்ற இந்தியாவில், வெள்ளைக்காரன் ஆட்சியே தேவலாம்! என்று இந்தியாவில் பல பெரிசுகள் புலம்பும் போது, 'என்னயிது விடுதலை பெற்ற நாட்டில் அடிமை ஆட்சியைப் பற்றி புகழ்ந்து பேசுவது' என்று சிலருக்கு அருவருப்பாகக் கூடத் தோன்றலாம். 'அப்படியா? ஏன் அப்படி சொல்கின்றீர்கள்' என்று சிலருக்கு புருவத்தை உயர்த்தவும் தோன்றலாம். தந்தை பெரியார் கூட வெள்ளையர் ஆட்சியே தேவலாம் என்று சொன்னவர்தான்.  வெள்ளையன் ஆட்சியில் இந்திய மாநிலத்தவர்கள் அனைவருமாக ஒரு நியாயத்திற்குப் போகும் போது, அவன் முழுக்க நமக்கு அனைவருக்குமான அன்னியன் என்பதால், நியாயம் சொல்ல அவனுக்கு உண்மை மட்டுமே தேவைப் படுகின்றது. அவன் வழங்குகிற தீர்ப்பு உண்மையானதாக இருந்தது. ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில், இந்திய மாநிலத்தவர்கள் அனைவருமாக ஒரு நியாயத்திற்குப் போகும் போது, நியாயம் சொல்லப் போகிறவன் இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கு சொந்தக்காரன்.  ஒட்டு மொத்த இந்திய மக்களுக்காக ஒற்றை ஆணிகூட பிடுங்காத மோடி ஆட்சியில், குஜராத் மாநிலம் மட்டும் எல்லையில்லாமல் வளர்ந்திருக்கிறது. சட்டத்திற்கு புறம்பாக ஹிந்தி மொழி வளர்ச்சி காங்கிரஸ்கட

ஹிந்தி, ஹிந்துத்துவா

படம்
தமிழில் அயல்மொழிச் சொற்களைப் பயன் படுத்த, அந்தச் செல்லையே தமிழ் ஒலிப்பிற்கு தக்கவாறு மாற்றி ஒலிக்க வேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழ் அறிஞர்கள் சில விதிகளை வகுத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, இங்கிலீஸ் என்பதை ஆங்கிலம் என்று ஒலித்து பயன்படுத்துகிறோம். கால மாற்றத்திற்கு இப்படி பிறமொழிச் சொற்கள் நிறைய தமிழில் புழக்கத்தில் கொண்டு வரப் பட்டுவிட்டன. அப்படி பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்ட இரண்டு சொற்கள் மட்டும் தமிழ் ஒலிப்பிற்கு தக்க மாதிரி மாற்றி ஒலிப்பதால், மிக மிக ஆபத்தானவைகளாக, தமிழக வரலாற்று அடிப்படையையே சிதைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த இரண்டு சொற்கள் ஒன்று ஹிந்தி, மன்றொன்று ஹிந்துத்துவா. இந்த இரண்டு சொற்களை நாம் இந்தி என்றும், இந்துத்துவா என்றும் ஒலிப்பை தமிழ் மொழிக்குத் தக்கவாறு மாற்றி புழங்குகிறோம். இதனால் நமது மண்ணான இந்தியாவும் அவர்களுடைய மண்ணோ என்ற மயக்கத்தை உருவாக்குகிறது.  எஸ்.வி.இராஜதுரை என்ற ஒரு தமிழ் ஆர்வலர் இந்தி, இந்து, இந்தியா என்று ஒரு நூலை எழுதி இந்தியாவும் அவர்களுக்குச் சொந்தம் போல கடுமையாக இந்தியாவையும் சேர்த்து சாடுகிறார்.  இன்ன

இராசராச சோழன்

படம்
வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர்  தமிழர் நூறு விழுக்காட்டினரும் ஒரே உயரமாக காட்சியளிப்பார்கள். அறிவாற்றலா? தனித்துவமா? பொருளாதாரமா? அன்பா? நியாயமா? ஆதிகாரமா? கோபமா? பணிவா? எதுவாக இருந்தாலும் சரி. ஒரு தமிழனை இன்னொரு தமிழன் சரிநிகர் என்றால் ஒப்புக் கொள்வான். உயர்ந்தவன் என்றாலோ, தாழ்ந்தவன் என்றாலும் கூட ஒப்புக் கொள்ள மாட்டான். அறைகூவலை எந்தத் தமிழனும் மறுதளிக்க மாட்டான். நியாயத்தை ஒற்றை மனிதனைப் போல ஒட்டு மொத்த தமிழரும் ஒப்புக் கொள்வார்கள். இதுதான் தமிழர் பலம் ; பலவீனம். ஆனால் தமிழர் அல்லாதவர்களிடம் ஏதாவது ஒற்றைத் தகுதி தன்னை விடச் சிறப்பாக இருந்தாலே போதும். தமிழன் தான் மட்டுமல்ல, அவன் தன்னைச் சார்ந்தவர்கள் அனைவரையும் அந்தத் தமிழர் அல்லாதவரை, அங்கிகரிக்கச் செய்வான். தமிழன் ஒருவன் உண்மை சொன்னாலே, இன்னொரு தமிழன் ஆய்வுக்கு உட்படுத்தியே ஒப்புக் கொள்வான். தமிழர் அல்லாதவர்கள் பொய் சொன்னால் கூட அவ்வளவாக ஆய்வுக்குட்படுத்த மாட்டான்.   இதனாலேயே தமிழர் அல்லாதவர்கள், தமிழரை கூட்டம் கூட்டமாக அள்ளிக் கொள்ள முடிகிறது. தமிழர்களிடம், தான் உயர்ந்தவன் என்று, ஒர